Pagetamil
இந்தியா

கைலாசாவிற்குள் நுழைய முடியாது: இந்தியர்களிற்கு தடைவிதித்த நித்தி!

இந்தியாவில் இருந்து கைலாசாவிற்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார் நித்தியானந்தா.

நித்தியானந்தா மீது பாலியல் புகார், ஆள் கடத்தல் என்று ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசாருக்கு தண்ணீ காட்டி வரும் நித்தி, கைலாசாவிற்கு என்று தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தார்.

மேலும், கைலாசாவில் வியாபாரம் செய்ய விரும்புவர்கள் வரவேற்கபடுகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதைப் பார்த்து கைலாசாவில் ஹோட்டல், டீ கடை எனத் தொழில் செய்து பிழைக்க பலர் நித்தியானந்தாவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்பத்தி வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் திருப்பதி எழுமலையான் வேடத்தில், புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். அதன் சூடு தனிவதற்குள் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்தி.

நித்தி பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில், கொரோனா நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கைலாசாவில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கியது தவறான தீர்ப்பு: மத்திய அமைச்சர் அதிருப்தி

Pagetamil

‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Pagetamil

யூடியூப் பார்த்து தங்கம் கடத்த கற்றுக்கொண்டேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

Pagetamil

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது: சிஐடி விசாரணையை திரும்ப பெற்ற கர்நாடக அரசு

Pagetamil

சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்!

Pagetamil

Leave a Comment