இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை துறைமுக நகரத்திற்கு அழைத்து செல்லும் சீன தூதரகம்: புதிய சர்ச்சை!

Date:

கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து செல்வதற்கு சீன தூதரகம் ஏற்பாடு செய்தமை குறித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியது.

நாடாளுமன்ற உறுப்பினர்களை நாளை 22ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்திற்கு கள விஜயமாக அழைத்து செல்ல, கொழும்பிலுள்ள சீன தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான அறிவிப்பு நாடாளுமன்ற அலுவலகத்தினால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டிருந்தது.

எனினும், பின்னர் அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்று மீளவும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண இன்று நாடாளுமன்றத்தில் இதனை சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பு துறைமுக நகரத்திற்கு அழைத்து செல்ல சீன தூதரகத்திற்கு என்ன உரித்துள்ளதென கேள்வியெழுப்பினார்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவப் புலனாய்வு பிரிவின் பங்கு: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகத் தடுப்புக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்