23ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறப்பு!

Date:

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீள திறக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் இருந்த நினைவுத்தூபி, அரசின் உத்தரவிற்கமைய பல்கலைகழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.

இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பல்கலைகழக மாணவர்கள், அனைத்து தமிழ் மக்கள், இந்தியா, சர்வதேச அமைப்புக்கள், தூதர்கள் என பல மட்டங்களில் எதிர்ப்பு வெளியானது. மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.

மாணவர்களின் போராட்டம் சிறு சலசலப்பு என வீம்பாக இருந்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இறங்கி வந்து, இருட்டோடு இருட்டாக மாணவர்களை சமாதாப்படுத்தி, மீண்டும் நினைவுத்தூபி அமைக்க அடிக்கல் நாட்டினார்.

கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி கட்டுமான பணிகள் ஆரம்பித்தன.

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் என்ற பெயரில் அமைக்கப்படும் நினைவுத்தூபி, வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி மைத்திரிக்கு முன்னரே தெரியும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே...

முக்கிய பல ஊழல் வழக்குகள் இந்த வருடம் விசாரிக்கப்படும்!

ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்