மிரட்டலை மீறி அன்னைக்கு அஞ்சலி!

Date:

அன்னைபூபதியின் 33வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

அன்னைபூபதியின் நினைவு தமிழ்தேசியகூட்டமைப்பினால் வழமைபோன்று இன்று (19) திங்கள் கிழமை காலை 6, 15, மணியளவில் மட்டக்களப்பு நாவலடி அன்னைபூபதி நினைவு வளாகத்தில் உள்ள கல்லறையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராசா, ஏறாவூர் பற்று பிரதேசசபை தவிசாளர் சர்வானந்தா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு 33,சுமர்களை ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தினர்.

கூட்டமைப்பினரின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதை தொடர்ந்து, தற்போது அந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அன்னைபூபதி அவர்கள் கடந்த 1988,ம் ஆண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலயத்தில் இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த வேளையில் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து முப்பது தினங்கள் உண்ணாவிரதம் இருந்து ஏப்ரல் 19ஆம் திகதி உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்