இலங்கை நீதிமன்றமொன்றில் முதன்முறையாக பாலூட்டும் தாய்மாரிற்கு தனி இடம்!

Date:

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் பாலூட்டும் தாய்மார்களிற்காக பிரத்தியே பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நீதிமன்ற வளாகங்களில் பாலூட்டும் தாய்மார் எதிர்கொள்ளும் சிரமத்தை பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில், கடந்த மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஹிருணிகா சரியான தருணத்தில் முன்னிலையாகவில்லை. ஓரிரு நிமிடங்கள் தாமதித்து விட்டார். அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் பாலூட்டும் தாய்மாரிற்கு வசதியில்லாததால் தனது வாகனத்தில் வைத்து குழந்தைக்கு பாலூட்டி விட்டு வந்ததால் அவரால் வழக்கில் சமூகமளிக்க முடியவில்லை. இதையடுத்து பிடியாணை விலக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை பகிரங்கமாக குறிப்பிட்டு, பாலூட்டும் தாய்மாரிற்குரிய வசதி ஏற்படுத்தப்பட வேண்டுமென நீதியமைச்சரிற்கு அழைப்பு விடுத்தார்.

ஹிருணிகாவை பாராட்டிய நீதியமைச்சர், நீதிமன்ற வளாகத்தில் பாலூட்டும் தாய்மாரிற்குரிய வசதியை ஏற்படுத்துவதாக உறுதியளித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு – பெருந்தொற்றுகளைத் தடுப்பதில் முக்கிய முன்னேற்றம்

எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வைரஸ்கள் மற்றும் பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப்...

குரு-சந்திர சேர்க்கையால் உருவான சமசப்தக் யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றியும் செல்வமும் குவியுமா?

ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ஜோதிட ரீதியாக பல சுப யோகங்கள் உருவாகி...

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்