கொரோனா அதிகரிப்பு காரணமாக நாளை முதல் வரும் மே 3ஆம் தேதி வரை இந்திய இணைப்பு விமானங்களும் ரத்து ; ஹாங்காங் அரசு அறிவிப்பு!!

Date:

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக வேகமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றிலிருந்து வரும் விமானங்களுக்கு, ஹாங்காங் தற்காலிகத் தடை விதித்துள்ளது. ஹாங்காங்கில், முதன்முறையாக N501Y ரகக் கிருமி கண்டறியப்பட்டதால், அந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

கடந்த இரு வாரங்களாக, அந்த 3 நாடுகளிலிருந்து ஹாங்காங்கிற்குச் சென்றுள்ள வெளிநாட்டினர் பலரிடம், அந்தக் கிருமி வகை அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ‘மிக அதிக ஆபத்துமிக்கவை’ என்று வகைப்படுத்தப்படும். தற்காலிகத் தடை, நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், Cathay Pacific, Hong Kong Airlines, Vistara, Cebu Pacific உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்