இலங்கை நீதிமன்றமொன்றில் முதன்முறையாக பாலூட்டும் தாய்மாரிற்கு தனி இடம்!

Date:

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் பாலூட்டும் தாய்மார்களிற்காக பிரத்தியே பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நீதிமன்ற வளாகங்களில் பாலூட்டும் தாய்மார் எதிர்கொள்ளும் சிரமத்தை பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில், கடந்த மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஹிருணிகா சரியான தருணத்தில் முன்னிலையாகவில்லை. ஓரிரு நிமிடங்கள் தாமதித்து விட்டார். அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் பாலூட்டும் தாய்மாரிற்கு வசதியில்லாததால் தனது வாகனத்தில் வைத்து குழந்தைக்கு பாலூட்டி விட்டு வந்ததால் அவரால் வழக்கில் சமூகமளிக்க முடியவில்லை. இதையடுத்து பிடியாணை விலக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை பகிரங்கமாக குறிப்பிட்டு, பாலூட்டும் தாய்மாரிற்குரிய வசதி ஏற்படுத்தப்பட வேண்டுமென நீதியமைச்சரிற்கு அழைப்பு விடுத்தார்.

ஹிருணிகாவை பாராட்டிய நீதியமைச்சர், நீதிமன்ற வளாகத்தில் பாலூட்டும் தாய்மாரிற்குரிய வசதியை ஏற்படுத்துவதாக உறுதியளித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை! ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் போராட்டம்

யாழ் மாநகரின் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளின் இடையூறுகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும்...

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்...

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்