26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

அறநெறிப்பாடசாலை திறந்து வைக்கப்பட்டது!

சிவத்தொண்டர் நாகேந்திரம் சுபாதர்ஷன் ஞாபகார்த்த அறநெறிப்பாடசாலை திறப்புவிழா நிகழ்வு வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் இன்று இடம்பெற்றது.

ஆலயத்தின் செயலாளர் தே.அமுதராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக யாழ்மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டு பாடசாலைக்கட்டடத்தை திறந்துவைத்தார்.

குறித்த அறநெறி பாடசாலை ஆதிவிநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் வவுனியா நகரசபைஉறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, அவரது ஒழுங்கமைப்பில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

நிகழ்வில் சிறப்புவிருந்தினர்களாக நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன், மற்றும் யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி அதிபர் மு.செல்வஸ்தான், திவாகரக்குருக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment