தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரில் பொறுப்பற்ற முறையில் பயணித்த நான்கு இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் அவர்கள் இன்று முற்படுத்தப்பட்ட போது, ஏப்ரல் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டள்ளது.
கண்டி, அக்குரணவில் வசிக்கும் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கார் சாரதி நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



