குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், ஹட்டன் சமுர்த்தி வங்கியில் இன்று கொடுப்பனவு வழங்கப்படவில்லை.
கொடுப்பனவை எதிர்பார்த்து பெருமளவானவர்கள் அங்கு குவிந்த போதும், அதிகாரிகளால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.




