25.3 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

சீனாவுடன் 500 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

சீன- இலங்கைக்கிடையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சீனாவிற்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித கொஹன்ன இந்த ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டுள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் அந்திய செலாவநியை ஊக்குவிக்கும் வகையில் குறித்த கடன் தொகையை பெற்றுக் கொள்ள இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடன் தொகை தொடர்பிலான ஒப்பந்தம் குறித்து சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரம் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வொப்பந்தம் தொடர்பில் சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கொஹன்ன குறிப்பிடுவதாவது,

இலங்கையின் பொருளாதாரத்தை புத்தாக்கம் செய்யும் நோக்கில் சீனா அரசாங்கம் இக்கடன் தொகையினை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இக்கடன்தொகை பெறுவதன் ஊடாக இலங்கையின் முதலீடுகளை மேற்கொள்ளும் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதுடன், டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். நெருக்கடியான சூழ்நிலையில் நட்பு நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கைக்க இக்கடன் தொகையினை வழங்கவுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் 6 இலட்சம் கொவிட்-19 வைரஸ் தடுப்பூசிகள் சீனாவினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

சந்தைப்படுத்தல், முதலீடு, சுற்றுலா மற்றும் விளையாட்டு, கல்வி ஆகிய துறைகள். ஊடாக இரு நாடுகளுக்கிடையில் இரு தரப்பு உறவினை மேம்படுத்த இலங்கையுடன் தொடர்பு கொள்ள தூதுவர் சீனாவிற்கு அழைப்பு விடுத்தார்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மட்டுப்படுத்தப்பட்ட பின்னர் சீன நாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளார்கள்.

சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரக காரியாலயத்தில் இலங்கை உற்பத்திகளை சீன நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தல், சீன நாட்டு முதலீடுகளை இலங்கையில் துரிதப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் சீனாவினால் கடந்த வருடம் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலரின் இரண்டாம் பகுதியாகும். இந்நிதியை பெற்றுக் கொள்வதற்கு சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் உரிய சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதியில் வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

east tamil

இலங்கைக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு

east tamil

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

Leave a Comment