இணையத்தில் விளம்பரம் செய்து இலவச ‘இன்ப சேவை’: குடும்ப வாழ்வில் திருப்தியில்லாதவர்களிற்கு இலவச சேவை செய்தவர் கைது!

Date:

பாலுறவில் இன்பம் அனுபவிக்க முடியாத தம்பதிகளிற்கு இலவச இன்ப சேவை வழங்குவதாக இணையத்தளம் மூலம் விளம்பரம் செய்து, பல்வேறு தம்பதிகளிற்கு இன்பம் வழங்கிய ஆசாமியொருவர் பற்றிய செய்தி அண்மையில் வெளியாகியிருந்தது.

அது குறித்த மேலும் சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீர்கொழும்பை சேர்ந்த அந்த நபர் தனியார் நிறுவனமொன்றில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். சமூகத்தில் மரியாதைக்குரியவரான அவருக்கு, நீலப்படங்களை அளவிற்கதிகமாக பார்க்கும் வியாதியிருந்தது.

அதீத பாலுறவு ஆர்வம் கொண்டிருந்த அவர், குடும்பத்தில் அதற்கான வாய்பின்றி திணடாடினார். அவரது மனைவியிடமிருந்து போதிய ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

மனைவியை தவிர, வேறொரு கூட்டாளரையும் கண்டுபிடிக்க விரும்பிய அவர், கூட்டாளரை தேடி பத்திரிகையில் செய்தி வெளியிடலாமா என யோசித்தார். எனினும், மனைவிக்கு விடயம் தெரிய வந்து விடும் என்பதனால்,  போலி பெயரில் முகநூல்  கணக்கொன்றை திறந்து விளம்பரம் வெளியிட்டார்.

“நான் ஒரு தனியார் நிறுவனத்தில் நிர்வாகியாக பணிபுரிகிறேன், திருமணமான இளம் தம்பதியினர், பாலியல் செயலிழப்பினால் அவதிப்பட்டால், அவர்களிற்கு உதவுகிறேன். இதற்கு முன்பு நீங்கள் அனுபவித்திருக்காத பாலியல் இன்பத்தை உங்களுக்கு தருவேன். மற்றவர்களுக்கு முடிந்தவரை உதவவும் விரும்புகிறேன். நூறு சதவீதம் இரகசியத்தன்மை பேணப்படும். நீர்கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து உதவி தேவைப்படுபவர்கள் கீழே உள்ள எண்ணை அழைக்கவும்.” என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் தனது தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

சில நாட்களின் பின்னர் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நீர்கொழும்பை சேர்ந்த ஜோடியொன்று அழைத்தது. அவர்கள் தமது பிரச்சனையை தெரிவித்தனர்.

கொச்சிக்கடையை சேர்ந்த அந்த தம்பதி, திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன.  மூன்று வயதில் ஒரு குழந்தையுள்ளது. ஆனால் அண்மைக்காலமாக கணவரால் திருப்தியாக உடலுறவில் ஈடுபட முடியவில்லை. எனினும், 36 வயதான மனைவி உறவை விரும்புகிறார்.

மனைவியையும் திருப்திப்படுத்த வேண்டும், குடும்பத்தின் மானமும் காற்றில் பறக்காமலிருக்க என்ன செய்யலாமென யோசித்துக் கொண்டிருந்த போது, அந்த விளம்பரத்தை கண்டதாகவும், தமது வீட்டுக்கு வந்து மனைவியை திருப்திப்படுத்த வேண்டுமென்றும் கணவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்படி குறிப்பிட்ட நேரத்தில் நீர்கொழும்பிலுள்ள அந்த வீட்டுக்கு நபர் சென்றார்.

தம்பதியினரின் பாலியல் பிரச்சனைகள் பற்றி அந்த நபர் பேசினார். ஒரு மணித்தியாலம் தம்பதியினருடன் பேசி, பாலுறவு சிக்கல்களை தெளிவுபடுத்தினார். இந்தகாலப்பகுதியில் இரு தரப்பிற்குமிடையில் நெருக்கம் அதிகரித்தது.

இதுவரை பேசிய விடயங்களை இனி செயல்முறையில் மேற்கொள்வோம் என அந்த தம்பதியினரை படுக்கை அறைக்குள் அந்த நபர் அழைத்து சென்றார்.

படுக்கையறையில் சுமார் ஒரு மணி நேரமாக, அவர்கள் மூவரும் தங்களது பல்வேறு உடல் ஆசைகளை தீர்த்துக் கொண்டனர்.

அந்த சந்தர்ப்பத்தின் பின்னர், பலமுறை அந்த வீட்டுக்கு சென்று, அந்த வீட்டு பெண்ணுடன் உடலுறவு கொண்டார். அப்போதெல்லாம் கணவன் வீட்டிலேயே இருந்தார்.

அவரது பேஸ்புக் விளம்பரத்தை பார்த்து பலர் தொடர்பு கொண்டனர். அவர்கள் எல்லோரையும் அவர் திருப்திப்படுத்தினார். நீர்கொழும்பு முதல் கம்பஹா வரை பலருக்கு இலவச இன்பச்சேவை செய்தார்.

நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி இது குறித்து தெரிந்து கொண்டார். அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்படி, இந்த நபரை மடக்கிப்பிடிக்க பொலிசார் திட்டமிட்டனர்

இதன்படி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் திருமணமான ஜோடியை போல அவரை தொடர்பு கொண்டனர்.

கணவனிற்கு பாலுறவில் சிக்கலுள்ளதாக பேசி, அவரது இன்பச்சேவையை கோரினர். இதன்படி, நீர்கொழும்பின் புறநகரிலுள்ள ஹொட்டல் ஒன்றில் சந்திப்பதென திட்டமிடப்பட்டது.

சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் ஹொட்டலில் தங்கியிருந்தனர். சம்பந்தப்பட்ட பொலிசார் ஹொட்டலிற்கு சென்ற சிறிது நேரத்தில் அந்த நபரும் காரில் ஹொட்டலுக்கு வந்தார். மாறுவேடத்திலிருந்த பொலிஸ் தம்பதியை காரில் ஏற்றிக் கொண்டு செல்ல முயன்ற போது, சிவில் உடை பொலிசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

அவரை நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் சில காலமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. தனது கணவர் கைது செய்யப்படும் வரை, இப்படியான நடவடிக்கையில் ஈடுபடுவதை மனைவி அறிந்திருக்கவில்லை.

அந்த நபருடனான உறவு தனக்கு தேவையில்லையென மனைவி கூறிவிட்டு, பொலிஸ் நிலையத்திலிருந்து சென்று விட்டார்.


ஜே.வி.பி, நியூலங்கா, தீவகம் என வகைதொகையில்லாமல் இணையங்கள், தமிழ்பக்க செய்திகளை மீள்பிரசுரம் செய்து வருகின்றன. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்பக்கத்துடன் இணைந்திருங்கள்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அமைச்சரவையில் மோசடிப் பேர்வழி: எச்சரிக்கும் மைத்துனர்!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முதல்வர் விஜய் கண்காணிக்குமாறு லஜக தலைவர் ஜோஸ்...

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை...

“தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

‘தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்