1.50 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது!!

Date:

நாடுமுழுவதும் புதிதாக 1,45,384 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 794பேர் பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டகொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடுமுழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,45,384 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,32,05,926 கோடியாக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 77,567 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,90,859ஆக உள்ளது.ஒரே நாளில் 794 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1,68,436 ஆக உள்ளது.நாடுமுழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,46,631 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி 16-ம் தேதி நாட்டில் கொரோனா தடுப்பூசி பணி தொடங்கியது. இதுவரை 9,80,75,160 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

spot_imgspot_img

More like this
Related

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...

ஈரானுடன் இணக்கமாக செயற்படுகிறோம்!

ஈரானுடன் அமெரிக்கா மிகவும் இணக்கமாகச் செயல்படுவதாகவும், கத்தாரில் சமீபத்தில் நடந்த சந்திப்புகள்...

யாழ் பல்கலை பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்