1.50 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது!!

Date:

நாடுமுழுவதும் புதிதாக 1,45,384 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 794பேர் பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டகொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடுமுழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,45,384 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,32,05,926 கோடியாக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 77,567 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,90,859ஆக உள்ளது.ஒரே நாளில் 794 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1,68,436 ஆக உள்ளது.நாடுமுழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,46,631 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி 16-ம் தேதி நாட்டில் கொரோனா தடுப்பூசி பணி தொடங்கியது. இதுவரை 9,80,75,160 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்