கூட்டமைப்பின் பேச்சாளர்கள் சொல்வது கட்சியின் முடிவல்ல; வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்: சிறிதரன் ‘பகீர்’ தகவல்!

Date:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்கள் அறிவிக்கும் விடயங்கள் கட்சியின் தீர்மானங்கள் அல்ல. கூட்டமைப்பிற்குள் அப்படி கூடி எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை. பேச்சாளர்கள் வாய்க்கு வந்தபடி சொல்லி விடுவார்கள் என பகீர் தகவலை தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்கள் யாரும் கட்சிக்குள் எடுக்கும் முடிவை வெளியில் சொல்வதில்லை. கூட்டமைப்பின் பேச்சாளர்கள் அறிவிக்கும் விடயங்களை மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்திருப்பதில்லை.

முன்னர் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அவர் தன்பாட்டில் என்னென்னவோ எல்லாம் அறிவிப்பார். அதேபோன்ற நிலைமைதான் இப்போதுமுள்ளது.

கூட்டமைப்பிற்குள் கூடி முக்கிய முடிசுகள் எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை. கூடி முடிவெடுத்ததாக பேச்சாளர்கள் அறிவித்து விடுவார்கள் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்