புதிய அரசியலமைப்பிலும் ஒற்றையாட்சியே பேணப்படும். ஒற்றையாட்சியால் நாடு எந்த பேரழிவையும் சந்திக்கவில்லை. சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பெயருக்கே இங்கே இடமில்லையென தெரிவித்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.
புதிய அரசியலமைப்பிற்கா ன நிபுணர் குழுவிடம் தமது யோசனையை சமர்ப்பித்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர், சமஷ்டி அல்லது கூட்டாட்சியை முன்மாழிந்திருந்தனர். அத்துடன் ஒற்றையாட்சி முறைமையினால்தான் நாடு பேரழிவை சந்தித்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த விடயத்தை தமிழ் மக்கள் கூட்டணி சுட்டிக்காட்டியால் கொதித்து போன வீரசேகர,
சமஸ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இந்த ஆட்சியில் இடமில்லை. இந்த முறைமைகள் புதிய அரசியலமைப்பில் இருக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் அணியினர் கனவு காணக்கூடாது. நடைமுறையிலிருக்கும் ஒற்றையாட்சி முறைமை மூலம் தான் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். புதிய அரசியல் அமைப்பிலும் இது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப் படும்.
ஒற்றையாட்சி முறையினால் இந்த நாடும் பேரழிவுகளை சந்திக்கவில்லை. பேரழிவை நோக்கி சென்று கொண்டிருந்த நாட்டை மீட்டெடுத்தோம். புலிகளின் தமிழீழ கனவை தவிடுபொடியாக்கினோம். அவர்களை இல்லாதொழிந்தோம்.
சமஷ்டி, கூட்டாட்சி முறைதான் பிரிவினைக்கு வழிவகுக்கும். அது நாட்டை பிளவுபடுத்தும், நாட்டின் நல்லிணக்கத்திற்கு பாதகமாக அமையும் என்றார்.