யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து வரப்படுகிறார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் வவுனியாவிலிருந்து அவரை அழைத்து வரப்படும் மணிவண்ணன், இரவு 8.00 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று யாழில் நீதிவான் முன்னிலையில் வி.மணிவண்ணன் முற்படுத்தப்படவுள்ளார்.
இதன்போது, வி.மணிவண்ணன் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகவுள்ளனர். எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் யாழ் நீதிமன்றத்தில் தற்போது பிரசன்னமாகியுள்ளனர்.
வி.மணிவண்ணன் நீதிமன்றம் அழைத்து வரப்படும் தகவல் பரவியதால், நீதிமன்றத்தின் முன்பாக பலர் குவிந்துள்ளனர்.



