திருமணம் என்பது 1000 காலத்துப் பயிர் என்பார்கள். திருமணம் செய்யும் முன் ஆயிரம் முறை இந்த துணை நமக்கு ஒத்து வருவாரா என யோசிக்கலாம். ஆனால் திருமணம் செய்த பின்னர் இந்த துணை நமக்கானவர் அல்ல என ஒருபோதும் யோசிக்கக் கூடாது.அப்படி திருமணம் செய்வதற்கு முன், திருமணம் செய்து கொள்ள விரும்புபவரின் உறவில் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை தன்மையை அதிகம் எதிர்பார்க்கக்கூடிய ராசியினர் யார் என்பதை பார்ப்போம்.
சிலர் திருமணம் செய்து கொண்டால் தனக்கான அர்ப்பணிப்பு அதிகரித்து விடும். அதனால் நாம் விரும்பியது போல செயல்பட முடியாது என நினைக்கின்றனர். அப்படி யோசிப்பவர்கள் தங்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என மிகவும் அதிகமாக சிந்திக்கத் தொடங்கி விடுகின்றனர். அப்படி சரியாக திருமண வாழ்க்கை அமையாதவர்கள் வாழ்க்கையில் சலிப்பூட்டும் அனுபவத்தைப் பெற்றுவிடுகின்றனர்.
ஆனால் சிலர் தனக்கென ஒரு லட்சியம் வைத்திருப்பார்கள் அது திருமணத்திற்கு பின் நிறைவேற்றும் ஆசையையும் வைத்திருப்பர். அவர்கள் தங்களின் துணையுடன் பேசி தன்னுடைய லட்சியத்தை அடைய முற்படலாம்..
திருமண எதிர்பார்ப்பு கொண்ட ராசிகள்
ரிஷபம்
ஒருவருடன் வாழ்க்கையில் பாதுகாப்பான உறவில் இருப்பது, தன் ஆசைக்கு தடை ஏற்படும் எற்பட்டுவிடக்கூடாது என ரிஷப ராசியினர் எப்போதும் எண்ணுவதுண்டு. எனவே, நிலையற்ற மற்றும் பயனற்ற உறவுகளில் தங்கள் நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் செட்டில் ஆகக்கூடிய ஒரு திருமண உறவை எதிர்பார்ப்பார்கள்.
கடகம்
கடக ராசியினர் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் துணையுடன் நிரந்தரமான, நம்பிக்கையான வாழ்க்கையை விரும்புகிறார்கள். இவர்கள் டேட்டிங் கலாச்சாரத்தை நம்பாதவர்களாகவும், திருமணம் என்பது பிடித்தால் சேர்ந்து இருக்கலாம். அல்லது பிரிந்துவிடலாம் என்ற மனநிலை அற்றவர்கள். அதனால் திருமண உறவு வலுப்பட திருமண வாழ்க்கையில் அர்ப்பணிப்பு மற்றும் பாதுகாப்புடைய, அன்பான துணையை தேர்ந்தெடுக்க விரும்புவார்கள்.
துலாம்
துலாம் ராசியினர் திருமண உறவில் எந்த ஒரு விஷயத்திற்கும் சமரசம் செய்து கொள்ள விரும்பாதவர்களாக இருப்பார்கள். இவர்கள் குடும்ப பாங்கான, குடும்ப உறவினர் அல்லது தங்களின் குடும்பத்திற்கு ஏற்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள்.அதே சமய தன் தரம், தகுதிக்கு குறைவான நபரை ஒருபோதும் விரும்பாதவராக அவருடன் சேர்ந்து வாழாதவராக இருக்கும் மன நிலையே கொண்டிருப்பர்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் பொதுவாகவே அதிகமாகவே யோசிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.அதனால் யார் தனக்கு சரியான திருமண துணைவன் என்பதை தேர்ந்தெடுக்கச் சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் திருமணம் செய்ய உள்ள நபர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வைத்திருப்பார்கள்அந்த எண்ணத்துடன் மதிப்பிட்டு தன்னை திருமணம் செய்பவர்களைப் பொருத்திப் பார்ப்பர். அப்படி ஒரு நபர் கிடைத்துவிட்டால் எப்போதும் அவரை விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக வாழ்வர்.
மகரம்
மகரத்தில் பிறந்தவர்கள் லட்சியமும், இலக்கை நோக்கி ஓடுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் திருமணம் பாரம்பரியமானதாக இருக்க வேண்டு என விரும்புவர் அதே சமயம் காதலிலும் ஆர்வம் கொண்டவராக இருப்பர்.இவர்கள் தன்னை தனித்துவமாகவும், தனியாக செயல்படவிடக்கூடிய நபர் வேண்டும் என விரும்புவார்கள். யார் இவரின் லட்சியத்தையும், ஆசையையும் மதிக்கிறாரோ அவரை திருமணம் செய்து கொள்ள தயங்கமாட்டார்கள்.




