நோர்வே நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க் (Erna Solberg) கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் எர்னா சொல்பேர்க் கடந்த பெப்ரவரி மாதம் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார். கொரோனா பாதிப்பு காரணமாக, 10 இற்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேற்க அனுமதி இல்லை அறிவிக்கப்பட்டிருந்த போதும், கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்ப உறுப்பினர்கள் 13இற்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளை கொண்டாடியதாக அவர் மீது புகார் எழுந்தது.
இதனையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பிரதமர் எர்னா சொல்பேர்க்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு 20,000 குரோன் (470,977 ரூபா) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1