32 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

Date:

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சந்தேக நபர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிந்துவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீரசேகர, விசாரணையைத் தொடர்ந்து 32 முக்கிய குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளதாக கூறினார்.

எட்டு விசாரணைக் கோப்புகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் தொகுக்கப்பட்ட அறிக்கையைப் பெறும் வரை சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் விரும்பாததால் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சட்ட நடவடிக்கை எடுப்பது சட்டமா அதிபரின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டமா அதிபர் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடாமல் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய முடியாது. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதில் தாமதத்திற்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...

16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: 21 வயது குடும்பஸ்தரும் நண்பரும் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை...

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்