வலி.தெற்கில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கு உலர் உணவு பொதிகள்!

Date:

வலி தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் பங்களிப்பில் அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதேச சபையின் தவிசாளர் க.தர்ஷன், சந்நிதியான் ஆச்சிரமத்திடம் வேண்டுகோள் விடுத்ததன் பயனாக குறித்த பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஏழாலை, குப்பிளான், மயிலங்காடு, புன்னாலைக்கட்டுவன் ஆகிய பகுதிகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள 30 குடும்பங்களுக்கே உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

வலி தெற்கு தவிசாளர் க.தர்ஷன், சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகன் சுவாமிகள், கிராம சேவகர் அகிலன், பொதுச்சுகாதர பரிசோதகர் ஆகியோர் மக்களிடம் உதவிப்பொருட்களை கையளித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்