உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடுகிறார்கள்.
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்டதைத் தொடர்ந்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்ததை குறிக்கு் விதமாக உயிர்த்த ஞாயிறு தினத்தை கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஈஸ்டர் நினைவுகூரப்படுகிறது.
பிரதான வழிபாடு இன்று கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களால் நடத்தப்படும்.
2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள், ஹொட்டல்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த இரத்தம் தோய்ந்த துயர நினைவுகளுடன் இன்று கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறை அனுட்டிக்கிறார்கள்.
இம்முறை தேவாலயங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1