இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் இடம்பெறும் வரையில் 5 பேர் கொண்ட தற்காலிக நிர்வாக குழுவொன்று விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக பேராசியர் அர்ஜுன டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஏஸ்லி டி சில்வா, சுஜீவ முதலிகே, உச்சித விக்கிரமசிங்க மற்றும் அமல் எதிரிசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தற்காலிக நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



