இனத்தின் விடிவிற்காய் இறை பணியோடு இணைத்து இறுதி வரை போராடியவர்

Date:

இரும்பு மனிதனாய் இதய சுத்தியோடு இனத்தின் விடிவிற்காய் இறை பணியோடு இணைத்து இறுதி வரை போராடிய இறைவனின் அடியவரே எமது ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

புள்ளி விபரங்களில் புலியாய் வெள்ளை ஆடையணிந்த புலியென எதிர்ப்பாளர்களினால் வர்ணிக்கப்பட்ட அஞ்சாத நெஞ்சன் இன்று அமைதியாய் துயில் கொள்கிறார்.

கம்பீரமான தோற்றம் கொண்டு சர்வதேசம் வரை எம் அநீதிகளை கொண்டு சென்ற ஆண்டகை எந்த நேரமும் மக்கள் நலனை மட்டுமே சிந்தித்து போராடிய ஒரு தலை மகனை இன்று தேசம் இழந்துள்ளது.

விடை காண முடியாத புதிராய் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்ட நம் உரிமைக் குரலை ஒட்டு மொத்தமாய் முடக்கினர்.

அந்த உத்தம மனிதன் இன மத பேதமின்றி நீதிக்காய் உழைத்த ஒரு உத்தமன் இன்று நிரந்தரமாய் துயில் கொள்கிறார். அவரின் கனவுகள் நிச்சயம் நிறை வேறும் அமைதியாய் உறங்குங்கள் தந்தையே என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்