டெல்லி கப்பிட்டல்ஸ் அணி கப்டனாக ரிஷாப் பண்ட்!

Date:

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் கப்டனாக ரிஷாப் பண்ட் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

14வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9ஆம் திகதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் கப்டனாக களம் இறங்க இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் சமீபத்தில் புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் பீல்டிங் செய்கையில் காயம் அடைந்தார். அவருக்கு இடது தோள்பட்டை இறங்கி இருப்பதால் விரைவில் சத்திர சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் அவர் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லி அணியின் கப்டன் பொறுப்பை ஏற்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. மூத்த வீரர்கள் ஆர்.அஸ்வின், ரஹானே, ஸ்டீவன் சுமித், இளம் வீரர் ரிஷாப் பண்ட் ஆகியோரின் பெயர்கள் கப்டன் பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்த சீசனுக்கான டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் கப்டனாக 23 வயது விக்கெட் கீப்பரான ரிஷாப் பண்ட் இருப்பார் என்று அந்த அணி நிர்வாகம் நேற்று இரவு அறிவித்தது. 2016ஆம் ஆண்டில் இருந்து டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷாப் பண்ட் முதல்முறையாக அணியை வழிநடத்த இருக்கிறார்.

ரிஷாப் பண்ட் கூறுகையில், “டெல்லி அணியுடன் எனது ஐ.பி.எல். பயணம் 6 ஆண்டுக்கு முன்பு தொடங்கியது. இந்த அணிக்கு என்றாவது ஒரு நாள் கப்டனாக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் உண்டு. அந்த கனவு இன்று நனவாகியுள்ளது. அதை பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன்“ என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...

16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: 21 வயது குடும்பஸ்தரும் நண்பரும் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை...

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்