மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சம் அடையாளம் காணப்பட்டது!

Date:

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் ஜோசப்வாஸ் நகரை சேர்ந்த பூபாலசிங்கம் அருள்ராஜ் (36) என தெரிய வருகின்றது.

குறித்த இளைஞர் மாற்றாற்றல் கொண்டவர் என்பதுடன் கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், உறவினர்கள் தேடி வந்தனர்.

எனினும் நீண்ட நாட்களாகியும் குறித்த இளைஞரை கண்டு பிடிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் மிகவும் உருக்குழைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த சடலத்தை காணாமல் போன இளைஞர்களின் உறவினர்கள் பார்வையிட்டனர்.

இந்த நிலையிலே உறவினர்களினால் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்ட நிலையில், சடலம் வைத்திய பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது உறுதியாகவில்லை.

spot_imgspot_img

More like this
Related

1 பில்லியன் டொலர் மோசடி! சில வங்கிகள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்