27.6 C
Jaffna
March 28, 2024
உலகம்

தன்சானியா ஜனாதிபதியின் இறுதி சடங்கு நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் உயிரிழப்பு!

தன்சானியா ஜனாதிபதிக்கு இறுதிச் சடங்கு செலுத்துவற்காக பொதுமக்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

தன்சானியா நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜோன் மகுஃபுலி (61), கடந்த 10 ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வில், ஜோன் மகுஃபுலிக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இந்த நிகழ்வில் திடீரென நெரிசல் ஏற்றட்டது. இதில் 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 45 ஆக உயர்ந்துள்ளது. ஜனாதிபதி இதயம் தொடர்பான நோயால் உயிரிழந்துள்ளார் என்று அரசு தெரிவித்தாலும், எதிர்க்கட்சி தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment