மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சம் அடையாளம் காணப்பட்டது!

Date:

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் ஜோசப்வாஸ் நகரை சேர்ந்த பூபாலசிங்கம் அருள்ராஜ் (36) என தெரிய வருகின்றது.

குறித்த இளைஞர் மாற்றாற்றல் கொண்டவர் என்பதுடன் கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், உறவினர்கள் தேடி வந்தனர்.

எனினும் நீண்ட நாட்களாகியும் குறித்த இளைஞரை கண்டு பிடிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் மிகவும் உருக்குழைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த சடலத்தை காணாமல் போன இளைஞர்களின் உறவினர்கள் பார்வையிட்டனர்.

இந்த நிலையிலே உறவினர்களினால் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்ட நிலையில், சடலம் வைத்திய பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது உறுதியாகவில்லை.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்