29.8 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

கல்குடாவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொது சுகாதாரப் பிரிவின் கல்குடாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால் அதனை கட்டுப்படுத்தும் முகாமாக சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது. பிரதேச மக்கள்,சமூக அமைப்புக்கள் மற்றும் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் என பலரும் ஒண்றினைந்து இதனை முன்னெடுத்தனர்.

பிரதேசத்தின் வெற்றுக் காணிகள்,பாடசாலைகள்,ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் காணப்பட்ட கழிவுப் பொருட்கள்,வெற்றுப் போத்தல்கள் என்பன சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. இதன்போது இவ் நோயின் தாக்கம் தொடர்பாக கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு உரை பொதுச்சுகாதார பரிசோதகரால் நிகழ்த்தப்பட்டது.

கல்குடாவில் 10 இற்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தகவல் தெரிவிக்கின்றனர். இந் நடவடிக்கையில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ஜே.யசோதரன், பிரதேச சபை உறுப்பினர் புஸ்பேந்திரன், கிராமசேவகர் க.கிருஷ்ணகாந்தன், சமூர்த்தி உத்தியோகஸ்த்தர் மா.காளிராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment