நுண்நிதி கடனை நிறுத்த கோரியும் பெண்களின் பாதிப்புக்களை வெளிப்படுத்தியும் முல்லைத்தீவில் கவனயீர்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நுண்நிதிக்கடனால் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு நகரில் வடமாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யுவசக்தி பெண்ககள் அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி முன்பாக தொடங்கிய கவனயீர்ப்பு புதுக்கடியிருப்பு நகரினை சென்றடைந்து கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதுடன்
நுண்ணிதி கடன் தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பில் துண்டு பிரசுரங்களையும் மக்களுக்கு வழங்கிவைத்துள்ளார்கள்.
நுண்நிதி கடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 08 ஆம் நாள் ஹிங்குராங்கொடவில் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதராவக இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.