சித்திரவதை கொடுமை: படுக்கையில் வைத்தே கணவனை கொன்றுவிட்டு பொலிசாருக்கு போன் பண்ணிய மனைவி!

Date:

தினமும் சித்திரவதை செய்த கணவனை நித்திரையில் வைத்தே கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

லுணுவில, ராஜவத்தை பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது.

நேற்று (28) அதிகாலை 2 மணியளவில், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கணவனின் கழுத்தை, துணியால் நெரித்து கொலை செய்துள்ளார். கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

ஜானக சம்பத் ஜெயரத்ன (42) என்பவரே கொல்லப்பட்டார். அவரது மனைவி டி.அனுஷா தில்ஹானி (38 ) கொஸ்வத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கணவனை கொலை செய்த பின்னர் 119 அவசர இலக்கத்தை அழைத்த மனைவி தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் வீட்டுக்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்தனர்.

அவர்களின் 6, 4, 2 வயதான பிள்ளைகள் பொலிசாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்