யாழ்ப்பாணம்தான் முதலிடம்!

Date:

இலங்கையில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் யாழ் மாவட்டத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்திலிருந்து நேற்று 88 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. எனினும், வடக்கு சுகாதார திணைக்களத்தின் நேற்றைய அறிவிப்பின்படி, 143 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கம்பஹா மாவட்டத்திலிருந்து 29 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 26 பேரும், இரத்தினபுரியிருந்து 28 பேரும், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 20, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 9 பேர், கண்டி, காலி, திருகோணமலை, மொனராகலை மாவட்டங்களிலிருந்து தலா 6 பேர், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து தலா 5 பேர், குருநாகல். கேகாலை, பதுளை, வவுனியா மாவட்டங்களிலிருந்து தலா 4 பேர், அம்பாறை, புத்தளம் மாவட்டத்திலிருந்து தலா 3 பேர், மாத்தறை மாவட்டத்திலிருந்து 2 பேர், மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 18 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று நாடடில் 278 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எணணிக்கை 91,839 ஆக உயர்ந்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

லாஃப்ஸ் எரிவாயு விலையும் உயர்ந்தது!

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு...

லிட்ரோ எரிவாயு விலைகள் எகிறின!

தொடர்ந்து நடைபெற்று வரும் சர்வதேச மோதல் காரணமாக அதிகரித்து வரும் உலகளாவிய...

புதுச்சேரி உள்விவகாரங்களில் தலையிட்டாரா இலங்கைத் தூதரக அதிகாரி?

புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதித்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்