UPDATE: யாழ் போதனாவில் 11 பேர்… நல்லூரில் 127 பேர்… மாநகரசபை உறுப்பினர்: யாழின் இன்றைய கொரோனா தொற்று விபரம்!

Date:

யாழ் மாவட்டத்தில் இன்று 143 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 743 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 127 பேருக்கு தொற்று உறுதியானது. திருநெல்வேலி சந்தையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களே இவர்கள்.

யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதில் யாழ்ப்பாண மாநகரசபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவரும் தொற்றிற்குள்ளாகியுள்ளார். அவர் நாவாந்துறையை சேர்ந்தவர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில், பரிசோதித்த கைதடியை சேர்ந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவர் திருநெல்வேலி பொதுச்சந்தையுடன் தொடர்புடையவர்.

 

spot_imgspot_img

More like this
Related

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்