பளை, இத்தாவிலில் நேற்றிரவு நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
தந்தையும், இரண்டு மகள்களும் உயிரிழந்துள்ளனர்.
டிப்பர் வாகனமும், கார் ஒன்றும் நேற்றிரவு 9.15 மணியளவில் மோதி விபத்திற்குள்ளாகின. காரில் பயணித்த 12, 09 வயதுடைய இரண்டு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இத்தாவில், பெரிய தர்மகேணியை சேர்ந்த 34 வயதான அழகரத்தினம் சற்குணநாதன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்தார்.
விபத்தில் தொடர்புடைய டிப்பர் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார்.