அரச பின்னணியில் நல்லூரில் மேடையமைத்திருந்த குழு அடுத்த திட்டத்திற்கு ரெடி!

Date:

முன்னாள் ரௌடிகள் உள்ளிட்ட தரப்பினர் சிலர் இராணுவத்தின் ஏற்பாட்டிலேயே, நல்லூரடியில் பந்தல் அமைத்து சில நாட்கள் உட்கார்ந்திருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

உழைப்பு, பிழைப்பை விட்டு விட்டு மேடை போட்டு உட்கார்ந்திருந்தால் குடும்பங்களின் அன்றாட செலவிற்கு என்ன ஆவது?, யார் பணம் தந்து அவர்களை இயக்குகிறார்கள் என சமூக ஊடகங்களில் பரவலாக கேள்விகள் எழுப்பப்பட்ட போதும், அந்த குழுவினரால் அதற்கு பதலளிக்க முடியவில்லை. மாறாக, தம்மை பொதுமக்களோ, ஊடகங்ளோ நெருங்கினால் பதற்றமடைந்து, சண்டித்தனத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தை சூழ பொலிசாரும், புலனாய்வாளர்களும் கண்ணிமைக்காமல் காவல்காத்தனர்.

இராணுவம்தான் எனது உறவை கடத்தியது என ஒரு பெண் சொல்வதும், அப்படி சொல்லக்கூடாதென ஏற்பாட்டாளர் சொல்லிக் கொடுக்கும் வீடியோவும் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில். இதேகுழுவினரை முன்னிலைப்படுத்தி இன்னொரு நகர்வு யாழில் நடக்கவுள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது.

நலலூரில் மேடை போட்டு அமர்ந்த போது முன்வைத்த சுலோகங்களை முன்வைத்து, கையெழுத்து போராட்டமொன்றை நடத்தும்படி அவர்கள் மீள களமிறக்கப்படவுள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது.

ஏற்பாட்டாளர் தரப்பில் உள்ள ஒருவர், இந்த தகவலை தெரிவித்தார்.

இதுதவிர, வேறும் சில முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். வழக்கம் போல, இதன் பின்னணி ஏற்பட்டாளர்களோ, ஆட்களை திரட்டி தருவதாக அவர் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது: அனைத்து முனைகளிலும் போருக்கு முற்றுப்புள்ளி!

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு "உடனடி மற்றும் நிரந்தர"...

இன்னும் சில மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் சில "மணிநேரங்களில்"...

சுரேஷ் சாலேவை மிரட்டி மருந்து கொடுத்த தாதி!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்