வீதியை விசித்திரமாக்கிய குடியிருப்பாளர்: சாவகச்சேரியில் சம்பவம்!

Date:

சாவகச்சேரியில் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டிற்கு முன்பாக உள்ள காப்பெற் வீதியின் மேல்பரப்பில் கொங்கிறீட் இட்டு வீதியை சேதமாக்கியுள்ளார்.

சாவகச்சேரி, சங்கத்தானை, இத்தியடிப் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள நகரகசபைக்கு சொந்தமான காப்பெற் வீதியையே இவ்வாறு போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் கொங்கிறீட் கலவையிட்டுள்ளார்.

தனது வீட்டு மதிலோடு இணைத்து வீதியின் முக்கால்வாசிப் பகுதியை காப்பெற்றுக்கு மேலாக கொங்கிறீட் இட்டு வீதியின் சீரமைப்பை சேதத்துக்குள்ளாக்கியுள்ளார்.

குறித்த குடியிருப்பாளரின் செயற்பாட்டை சாவகச்சேரி நகரசபை இதுவரை கண்டுகொள்ளவில்லை என வீதியில் பயணிப்போர் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் குடியிருப்பாளர்கள் சிலர் வீதியோடு இணைத்து கொங்கிறீட் போட்டமையினால் மழை நீர் வழிந்தோட முடியாமல் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்