வடக்கில் மேலுமொரு கொரோனா மரணம்!

Date:

வடக்கில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 82 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இது வடக்கின் 11வது மரணமாகும்.

வவுனியாவை சேர்ந்த முதியவர் மூச்சுவிட சிரமமான நிலையில் நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

அவர் ஆபத்தான நிலையிலிருந்ததையடுத்து, இன்று நண்பகல் 12 மணியளவில் வவுனியா வைத்தியசாலையிலிருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மதியம் 2 மணியளவில் உயிரிழந்தார்.

வடக்கில் கடந்த 4 மாதங்களில் மன்னார் மாவட்டத்தில் 5 பேரும், யாழ் மாவட்டத்தில் 4 பேரும், வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தாக்குதல்களை நிறுத்தி பேச்சை தொடர அமெரிக்கா, ஈரான் இணக்கம்!

ஈரானும் அமெரிக்காவும் சமீபத்திய மோதல்களை நிறுத்தி, ஹோர்முஸ் ஜலசந்தி மீதான தங்கள்...

பல குற்றவாளிகளுக்கு கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்த ஜனாதிபதி செயலக அதிகாரி

பாதாள உலகக் கும்பல் தலைவர் கரந்தெனிய ராஜுவுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்த...

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் அரசு அனுமதி மறுப்பு

அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்