நாளை 25 ஆம் திகதி வியாழக்கிழமையை துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரின் இறுதி கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளமையை முன்னிட்டு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இறைச்சிக் கடைகளும் நாளை 25 ஆம் திகதி வியாழக்கிழமை மூடப்படவுள்ளன.




