பொலிசாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் பேரணி: அதிரடி திட்டத்தால் தடைமுயற்சி பிசுபிசுப்பு!

Date:

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் இன்று (19) ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

மட்டக்களப்பில் முன்னர் திட்டமிட்டிருந்த இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், திடீர் ஏற்பாடாக இடம்மாற்றம் செய்யப்பட்டு, போராட்டம் இடம்பெற்றது.

வந்தாறுமூலை பனிங்கையடி ஆலயத்திலிருந்து சித்தாண்டி வரை போராட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் போராட்டம் நடக்கவிருந்த நிலையில்,  அங்கு பெருந்தொகையான பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால், திடீரென இடமாற்றப்பட்டு போராட்டம் இடம்பெற்றது. எனினும், அங்கும் வந்த பொலிசார் வழிமறித்து இடையூறு ஏற்படுத்த முயன்றனர். ஆனால் அதை தாண்டி போராட்டம் நடந்தது.

நீதிமன்ற தடையுத்தரவை வழங்க பொலிசார் முயன்ற போதும், அதை யாரும் பெற்றுக்கொள்ளவில்லை.

இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.பிக்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.நடராசா, முன்னாள் அரச அதிபர் மா.உதயகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் நகுலேஸ், தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலன் சுவாமிகளும் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு எம்.பி சாணக்கியன் இந்த போராட்டத்தை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...

ஏழைகளை வித்தியாசமாக நடந்த முடியாது: ரூ.225,000 இழப்பீடு வழங்க 3 பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2023 ஆம் ஆண்டில் ஹன்வெல்ல காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்