அமெரிக்காவில் ஆசியர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி!

Date:

அமெரிக்காவில் 3 ஆசிய ஸ்பாக்களில் நடத்தப்பட்ட துப்பக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்றுசெவ்வாய்க்கிழமை ஜோர்ஜியா மாநிலத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. மூன்று ஸ்பாக்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் 6 பேர் ஆசிய பெண்கள் ஆவார்கள்.

சந்தேகத்திற்குரிய 21 வயது வாலிபர் ஒருவரை பொலிசார் கைது செய்து உள்ளனர்.

ஜோர்ஜியாவின் தலைநகர் அட்லாண்டாவின் புறநகர்ப் பகுதியான அக்வொர்த் அருகே யங்ஸ் ஆசிய மசாஜ் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பெண்கள் கொல்லப்பட்டனர்.

அட்லாண்டாவில் உள்ள பீட்மாண்ட் வீதியில் உள்ள கோல்ட் மசாஜ் ஸ்பாவில் மூன்று பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அதுபோல் அரோமா தெரபி ஸ்பாவில் ஒருவர் சுட்டுகொல்லப்பட்டு உள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை நடத்திய உட்ஸ்டாக் பகுதியைச் சேர்ந்த ரொபர்ட் ஆரோன் லாங் (21) கிறிஸ்ப் கவுண்டியில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.

துப்பாக்கிச்சூடுக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...

ஈரானுடன் இணக்கமாக செயற்படுகிறோம்!

ஈரானுடன் அமெரிக்கா மிகவும் இணக்கமாகச் செயல்படுவதாகவும், கத்தாரில் சமீபத்தில் நடந்த சந்திப்புகள்...

யாழ் பல்கலை பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்