புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் 2021 ஆறாம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் இணைத்து கொள்ளப்பட்டு முதன் முதலாக பாடசாலைக்கு உள் வாங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ்.சந்திரமோகன் தலைமையில் இன்று (17) நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள் உப அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்
இதன் போது புதிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றல் உபகரணங்கள் உட்பட இனிப்பு பண்டங்கள் வழங்கி வரவேற்றனர்.





