கனடாவில் சித்திரவதைப்படும் இலங்கை யானையை விடுவியுங்கள்: தூதரகத்தில் மனு

Date:

இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட லுாசி என்ற யானை, கனடாவின் மிருகக்காட்சி சாலையில் மோசமான சூழலில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டு, கொழும்பிலிலுள்ள கனடா தூதரகத்தில் மனு கையளிக்கப்பட்டது. அந்த யானையை சுதந்திரமான சூழலில் விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டலூசி என்ற யானை, இப்போது கனடாவின் எட்மண்டன் மிருகக்காட்சிசாலையில் சரியான வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறது என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

இலங்கை ரமண்ய நிகாயவின் தலைமை மகாநாயக்கர் ஓமல்பே சோபித நா தேரர் தலைமையிலான போராட்டக்காரர்கள், கொள்ளுப்பிட்டியிலிருந்து  கனேய உயர் ஸ்தானிகராலயம் வரை சென்று மகஜர் கையளித்தனர்.

1977 ஆம் ஆண்டில் சிறிய யானைக்குட்டி, தேசிய விலங்கியல் துறையால் ஒரு ஜெர்மன் தொழிலதிபருக்கு விற்கப்பட்டது. பின்னர், அவரால் கனடிய மிருகக்காட்சிசாலைக்கு 9789 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாக சோபித தேரர் தெரிவித்தார்.

யானை இப்போது தனக்கு பொருந்தாத, கொங்கிரீட்டால் சூழப்பட்ட ஒரு குளிர் சூழலில் வாழ்ந்து வருவதாகவும், 44 ஆண்டுகளாக பரிதாபகரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த லூசி, சுதந்திரமான சூழலைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்