தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், இலங்கைக்கான இந்திய தூதர் ஒருவருக்குமிடையிலான முதலாவது சந்திப்பு இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய தூதர் கோபால் பாக்ளே, இன்று முக்கிய அரசியல் கட்சிகளை சந்தித்து பேச்சு நடத்தி வருகிறார்.
இன்று காலை 9.00 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடினார். 30 நிமிடங்கள் நடந்த சந்திப்பை தொடர்ந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பும் 30 நிமிடங்கள் நீடித்தது.
பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை சந்தித்து கலந்துரையாடினார்.



