25.9 C
Jaffna
March 29, 2024
இந்தியா

முகேஷ் அம்பானி வீட்டிற்கு அருகில் வெடிப்பொருட்களுடன் கார்; டெலிகிராம் கணக்கு திகாரில் உருவாக்கப்பட்டது!

தென்மும்பையில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் கடந்த மாதம் 25-ந் தேதி வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் கார் திருடப்பட்டதாக போலீசில் புகார் அளித்து இருந்த, அதன் உரிமையாளரான ஹிரேன் மன்சுக் கடந்த 5-ந் தேதி தானே கழிமுகப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில் திருப்பதையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் வெடிப்பொருட்களுடன் காரை நிறுத்தியதற்கு கடந்த 27-ந் தேதி டெலிகிராமில் ஜெய்ஷ்-உல்-இந்த் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்று இருந்தது. எனினும் மறுநாள் வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என அந்த அமைப்பு தெரிவித்தது. இந்தநிலையில் சம்பவத்திற்கு பொறுப்பேற்று தகவலை பரப்பிய டெலிகிராம் கணக்கு டெல்லியில் உள்ள திகாரில் உருவாக்கப்பட்டதை கண்டறிந்து இருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment