ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்பு வீதியை புனரமைக்க கோரிக்கை!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படும் இரண்டு கிலோமீட்டர் நீளமான வீதியினை புணரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்த போது மாத்தளனில் இருந்து புதுக்குடியிருப்பு ஊடாக அரைவாசி தூரம் காப்பற் வீதியாக செப்பனிடும் பணிகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டானில் இருந்து தார் வீதியாக குறித்த வீதியின் மீதி பணிகள் ஆரம்பித்த போதும் இரண்டு பகுதிகளிலும் இடைநடுவில் இரண்டு கிலோமீட்டர் தூரம் திருத்தப்பட்டாது தவறவிட்ட நிலையில் குறித்த வீதியின் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.

மழைக்காலங்களில் குறித்த வீதியில் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுவதோடு ஏனைய காலப்பகுதிகளிலும் குன்றும் குழியுமாக காணப்படும் குறித்த வீதியில் பயணம் செய்யும் அரச ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே குறித்த சுமார் 2 கிலோமீட்டர் நீளமான வீதியை மிக விரைவாக செப்பனிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ரூ. 20,000 இலஞ்சம்...

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்