மாணவனை துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது!

Date:

பாடசாலையின் 16 வயது  மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஓபநாயக்க பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவரின் தந்தை ஓபநாயக்க பொலிஸில் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 03 அன்று பாடசாலை நேரத்திற்குப் பிறகு தனது மகனை, அதிபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக மாணவனின் தந்தை கூறியிருந்தார்.

மாணவர் பல சந்தர்ப்பங்களில் மனஉளைச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, மாணவரின் பெற்றோர் இதன் பின்னணியை ஆராய்ந்ததில், அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடயில் வசிக்கும் சந்தேகநபர் நேற்று பலாங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்