மன்னார்- கொழும்பு புகையிரத முற்பதிவு தடங்கலை நேரில் சென்று ஆராய்ந்த அரச அதிபர்!

Date:

மன்னாரில் இருந்து கொழும்பிற்கு புகையிரதத்தில் பயணிக்கும் மக்கள் ஆசன முற்பதிவு இல்லாமையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அரச அதிகாரிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல்லின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் இன்று புதன் கிழமை (10) மதியம் அரசாங்க அதிபர் மன்னார் புகையிரத நிலையத்திற்கு சென்று உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

மன்னாரில் இருந்து கொழும்பிற்கான ஆசன முற்பதிவு இணையம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனினும் முற்பதிவு சேவைகளில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக மக்கள் மற்றும் அரச அதிகாரிகள் முற்பதிவு செய்ய முடியாத நிலையில் மன்னாரில் இருந்து கொழும்பிற்கு புகையிரதத்தில் பயணித்து வந்தனர்.

இந்த பிரச்சினை நீண்டகாலமாக காணப்பட்டுள்ளது. முற்பதிவு செய்து பயணிப்பதற்கான புகையிரத இருக்கைகள் மன்னாரில் இருந்து வெறுமையாகவே செல்வதாகவும் தெரிய வந்துள்ளது.

அரசாங்க அதிபர் மன்னார் புகையிரத நிலையத்திற்குச் சென்று உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி மக்கள் பல நாட்களாக எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இந்த நிலையில் ஏற்பட்டுள்ள இடர்களை நிவர்த்தி செய்து உடனடியாக மன்னாரில் இருந்து கொழும்பிற்கான முற்பதிவு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி நடமுறைப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்