29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

சுருட்டு பற்றிய முதியவர் தீயில் எரிந்து உயிரிழப்பு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தீயில் எரிந்து காயமடைந்திருந்த நிலையில் நேற்று (9) சாவடைந்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி குறித்த முதியவர் சுருட்டினை பற்றியுள்ளார். இதன்போது தவறுதலாக அவரது சாரத்தில் தீப்பற்றியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் சாவடைந்துள்ளார்.

சம்பவத்தில் சங்கரப்பிள்ளை வேதாரணியம் (79) என்ற முதியவரே சாவடைந்துள்ளார். அவர் சிலகாலங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது மரணம் தொடர்பாக வவுனியாநகர திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதன்பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment