அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களில் சிலருக்கு, மார்பு வீங்கி அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இதனால், அங்கு தடுப்பூசி மிக விரைவாக செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் அமெரிக்காவில் பைசர் மற்றும் மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் புதிய தடுப்பூசிக்கும் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள், உள்ளரங்குகளில் முகக்கவசம் அணியாமல் சந்தித்து கொள்ளலாமென அமெரிக்க நோய்த்தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் புதிய தலைவலியாக, மொடர்னா, பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில பெண்களின் மார்பகங்கள் வீங்கியதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பல பெண்கள் மருத்துவர்களை நாடி பரிசோதனைகளை செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.