30.9 C
Jaffna
April 29, 2025
Pagetamil
இலங்கை

சஹ்ரானை வழிநடத்தியது நௌபர் மௌலவியே!

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக கட்டாரில் கைது செய்யப்பட்ட முகமது இப்ராஹிம் முகமது நௌபர் என்பவரால் சஹ்ரான் ஹாஷிம் வழிநடத்தப்பட்டதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

“சஹ்ரான் முதன்முதலில் 2017 இல் அலியார் சந்தி பகுதியில் தாக்குதல் நிகழ்த்தினார்.
இது மதக் கருத்துக்களைக் கொண்ட மக்கள் குழு மீதான தாக்குதல்.
தாக்குதலைத் தொடர்ந்து, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு வரை அவருடன் தொடர்பு கொண்டிருந்த நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது உளவுத்துறை விசாரணைகளை மேற்கொண்டது.

அவர் பல ஆண்டுகளாக கத்தார் இராச்சியத்தில் இருந்த முகமது இப்ராஹிம் முகமது நௌபர் என்பவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது தெரிய வந்தது.

இந்த நௌபர் சஹாரனை ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் சித்தாந்தத்துடன் இணைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. நௌபர் என்று அழைக்கப்படும் நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் ”என்று பொது பாதுகாப்பு அமைச்சர் கூறினார்

இதற்கிடையில், ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவிற்கு தெமட்டகொட இப்ராஹிம் சகோதரர்கள் ரூ .500 மில்லியனை வழங்கியதாகவும், அந்த பணத்துடன் தாக்குதலுக்கு தேவையான பொருட்களை அவர்கள் வழங்கியதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு!

Pagetamil

கனடா பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்

Pagetamil

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப்பட்டாசு!

Pagetamil

மஹிந்த பாணியிலேயே அனுர அரசும்!

Pagetamil

கடந்த அரசுகளுக்கும் ஜேவிபிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது!

Pagetamil

Leave a Comment