ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்பு வீதியை புனரமைக்க கோரிக்கை!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படும் இரண்டு கிலோமீட்டர் நீளமான வீதியினை புணரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்த போது மாத்தளனில் இருந்து புதுக்குடியிருப்பு ஊடாக அரைவாசி தூரம் காப்பற் வீதியாக செப்பனிடும் பணிகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டானில் இருந்து தார் வீதியாக குறித்த வீதியின் மீதி பணிகள் ஆரம்பித்த போதும் இரண்டு பகுதிகளிலும் இடைநடுவில் இரண்டு கிலோமீட்டர் தூரம் திருத்தப்பட்டாது தவறவிட்ட நிலையில் குறித்த வீதியின் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.

மழைக்காலங்களில் குறித்த வீதியில் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுவதோடு ஏனைய காலப்பகுதிகளிலும் குன்றும் குழியுமாக காணப்படும் குறித்த வீதியில் பயணம் செய்யும் அரச ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே குறித்த சுமார் 2 கிலோமீட்டர் நீளமான வீதியை மிக விரைவாக செப்பனிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்